சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இதுவரை வாசித்தது
இல்லை. பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தில் செய்யுளாக மனப்பாட பகுதியில் அதன் சிறிய
பகுதியை படித்ததோடு சரி. ஆனால் சிலப்பதிகாரத்தின் கதை; கதை மாந்தர்கள்; கதைக் களம்;
நீதி என அத்துணையும் இங்கு என்னைப் போல அனைவருக்குமே அத்துப்படி. பிறந்தது முதல் சிலப்பதிகாரத்தை
வாசித்திராத என்போன்றோரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த கதையின்பால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள்.
கதைசொல்லிகள் சூழ்ந்த இம் மண்ணில் சிலப்பதிகாரம் எனும் இலக்கியக் காப்பியம் மக்களோடு
புலங்கிக் கொண்டே இருக்கிறது. கண்ணகி என்கிற பெயரையோ; கோவலன் என்கிற பெயரையோ; மாதவி
என்கிற பெயரையோ அறியாதவர்கள் யாருமே இங்கு இல்லை எனலாம். அந்த அளவிற்கு சிலப்பதிகாரம்
அனைவரிடமும் கடத்தப்பட்டிருக்கிறது.