பள்ளியில் படிக்கும் போது அரையாண்டு காலாண்டு முழு ஆண்டு தேர்வு விடுமுறை தினங்கள் எனது பெரிய மாமா வீட்டிலேயே கழிந்தது. அவரது வீட்டுக்கு அருகில் கடலை மிட்டாய் தயார் செய்யும் சிறு வீடு இருந்தது. ஓட்டு வீட்டுக்குள் வைத்து மிகச் சுவையான கடலை மிட்டாய்களை தயாரித்துக் கொண்டு இருப்பார்கள்.
"ஓட்டு வீட்டுல தான செய்றாங்க, பின்ன ஏன் குடிசைத் தொழில்னு போட்டுருக்காங்க!!"
என அந்த மிட்டாய் மேல் இருக்கும் பெயர் காகிதத்தை பார்த்து மாமாவிடம் கேட்பேன். அவர் பதில் சொன்னதாக நினைவில்லை.